யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பூநகரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.