பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 716 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
580 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 136 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.