இஸ்மதுல் றஹுமான்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் ஆறு வருட நிரைவை முன்னிட்டு நீர்கொழும்பு, கட்டுவபிட்டி சாந்த செபஸ்தியன் தேவாலயத்தில் 21 ம் திகதி மாலை கொழும்பு பேராயர் மல்கம் கார்தினல் ரன்ஜித் தலைமையில்
இடம்பெற்ற நினைவு நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 118 பேர்களுக்கு “விசுவாச சாட்சிகள்” என பெயரிடப்பட்டதுடன்
பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் அநுர கருனாதிலக்க அரச அதிகாரிகள் உப பேராயர்கள், பங்குத் தந்தைகள் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
இதற்காக கொழும்பு பேராயர்
34 மில்லியன் ரூபா செலவில் 80 பேச்சஸ் காணி வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்து ஒரு வீடு 6.3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபை 12 மில்லியன் ரூபா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுங்கு
தொடர்ந்தும் உதவிசெய்வதாக கத்தோலிக்க சபையினர் தெரிவித்தனர்.