கொழும்பு
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 80 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 160 கிராம் ஹெரோயின், 152 கிராம் ஐஸ், 10 கிலோகிராம், 745 கிராம் கஞ்சா மற்றும் 683 போதை மாத்திரைகள் சந்தேகநபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன