அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களைத் தவிர சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கமைய, இந்த விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








