தமிழக சிரேஷ்ட அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட செங்கோட்டையன் அண்மையில் இடம்பெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தார்.
அவர் அந்த கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் செங்கோட்டையனுக்கு நிதியமைச்சு வழங்கப்பட்டது.
எனினும் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட நிதியமைச்சு பதவி மீளப் பெறப்பட்டு, வருவாய் வரித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே செங்கோட்டையன் தற்போது காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.









