2025 லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்தத் தொடர் அடுத்த ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஏற்பட்டாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
2025 எல்.பி.எல். தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடாகி இருந்தது. எனினும் 2026 டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை நடத்தவிருப்பதால் அதற்காக மைதானங்களை தயார் செய்வது மற்றும் ஏற்பாடுகளுக்காக எல்.பி.எல். தொடரை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்தது.
இதேநேரம் அடுத்த பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு, தம்புள்ளை, காலி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 5 அணிகளே போட்டியிடவுள்ளன. தொடரின் 6ஆவது பருவத்திற்கான உத்தியோகபூர்வ வர்த்தகத் தூதுவராக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் நியமிக்கப்படவுள்ளார்.










