இன்று (08) முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள், கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் பகுதிகளில் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல், சட்டவிரோத மேலதிக உதிரிபாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்யப்படவுள்ளது.
அதிகமான சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பில் இன்று முதல் சட்டத்தை கடுமையாக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.