அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந் நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அப் பல்கலைக்கழகத்துக்கு ட்ரம்ப் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார்.
அவற்றை ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனால் அப் பல்கலைகழகத்துக்கு அளித்துவந்த $2.2 பில்லியன் நிதியுதவியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் உத்தரவிட்டார்.
மேலும் குறித்த பல்கலைக்கழகத்துக்கு வரி விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
ட்ரம்பின் இந்த எச்சரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி,ட்ரம்பின் உத்தரவு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளார்.