வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வீதியில் சைபிரஸ் மரமொன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் கடும் கற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில்
இன்று (20) அதிகாலை வீசிய கடும் கற்றினால் சைபிரஸ் மரம் வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.
இதனால் அட்டன், வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வரையான பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
மரத்தை வெட்டியகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.