இந்த வருடத்தில் கடந்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 2,000 பேர் வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக போக்குவரத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகோட தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகள், வீதிகளுக்குப் பொருத்தமற்ற வாகனங்கள் மற்றும் பொறுப்பற்ற சாரதிகளால் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு வீதி விபத்துகளால் ஏற்பட்ட இறப்புகளுக்கு கூடுதலாக, 7,152 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறினார்.
“ஜனவரி 1, 2025 முதல் ஜூன் 15, 2025 வரை, இந்த 6 மாதங்களில் 1,133 அபாயகரமான வீதி விபத்துகளில் 2,000 பேர் மரணித்துள்ளனர். இது மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலை என்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரி பாகங்கள் ஜூலை 1 ஆம் திகதி முதல் அகற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
நிகழ்வில் பேசிய கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்துப் பிரிவின் இயக்குநர் இந்திக ஜகொட, வீதி விபத்துகள் ஒரு அமைதியான தொற்றுநோயாக மாறிவிட்டதாகக் கூறினார்.