பலாங்கொட ரஜவக்க மகா வித்தியாலயத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு குழுவை நியமித்து முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளவும், ஒரு வாரத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் சேதமடைந்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் ஒன்றை கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அவர் கூறினார்.
இதன்படி, சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களம், இரண்டு மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஒரு பிரதி கல்விப் பணிப்பாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை நியமித்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஆறு பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் சிகிச்சைக்கு பின்னர் வெளியேறியதாகவும் பலாங்கொட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.ஏ.எல்.எல்.கே ஆரச்சி தெரிவித்தார்.
சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதி மூலம் இழப்பீடு வழங்குவது அல்லது தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் உயிரிழந்த பலாங்கொட, பிபிலவெல பிரதேசத்தில் வசிக்கும் கலைப்பிரிவில் கல்வி கற்ற 17 வயது மாணவர் கிவிர ஹிருஜயவுக்கு இறுதிக் கிரியை நிக ழ்விலும் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன பங்கேற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு தனது கவலையை தெரிவித்த பிரதி அமைச்சர், உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு கல்வி அமைச்சு மற்றும் பேரிடர் முகாமைத்துவ திணைக்களத்தின் தலையீட்டுடன் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்