பேருந்தில் தூங்கும் பயணிகளிடம் செல்போன் திருடும் கும்பல் குறித்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், தூங்கிக்கொண்டிருந்த பயணி ஒருவரின் பையிலிருந்து செல்போனை திருடுவது பதிவாகியுள்ளது. பயணிகள் பயணத்தின்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.