இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் 12.05.2025 சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.
இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
மேலும் தமது சமூகத்திற்கான நீண்டகால நட்பு மற்றும் அர்ப்பணிப்புக்குகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஜீவன் தொண்டமான் இதன்போது தெரிவித்தார்.










