இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.
பாரிஸில் 26.06.2024 நடைபெற்ற ஒன்று கூடலின் போதே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.
இந்த உடன்படிக்கை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன் அத்தியாவசிய பொது சேவைகளை பேணுவதற்கும் அபிவிருத்தி தேவைகளுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.