முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தனது வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இராஜதந்திர கடவூச்சீட்டு பெற்றுக்கொண்டா விவகாரம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சந்தேகநபராக பெயரிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, டயனா கமகே தங்கியிருந்த வீட்டிலிருந்து அவர் தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
டயனா கமகே, இலங்கை பிரஜை அல்லவென உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.
இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், தனது இலங்கை கடவூச்சீட்டை,டயனா கம, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் ஒப்படைத்திருந்தார்