சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் வட்ஸ் அப் எண்ணில் பெறப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் அறிமுகப்படுத்திய வட்ஸ் அப் எண்ணில் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000ஐத் தாண்டியுள்ளது.
0718598888 என்ற இலக்கமே பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.