அஸ்ரப் ஏ சமட்
சாயந்தமருது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று(16)சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
கட்சியின் தவிசாளர் ஏ.எல்.எம்.மஜிட் தலைமையில் இடம்பெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.