இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு ஒன்று தொடர்பாக இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.










