மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் நாளை 01ஆம் திகதி மதியம் 12.00 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பின்வரும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன,
UL225 கொழும்பு / துபாய்
UL226 துபாய் / கொழும்பு
UL229 கொழும்பு / குவைத்
UL230 குவைத் / கொழும்பு
UL217 கொழும்பு / தோஹா
UL218 தோஹா / கொழும்பு
UL253 கொழும்பு / தம்மாம்
UL254 தம்மாம் / கொழும்பு
UL265 கொழும்பு / ரியாத்
UL266 ரியாத் / கொழும்பு
மீளப் பதிவு செய்தல் மற்றும் மேலதிக உதவிகளுக்காக பயணிகள் 1979 என்ற உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது www.srilankan.com இணையத்தளத்திற்குச் செல்லுமாறு அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது அந்தந்த பயண முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.









