யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவர் பெருந்தொகைப் பணத்தை காலால் மிதிக்கும் காணொளிப் பதிவுகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறைத் தலைமையகத்தில் இருந்து விடுக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, யாழ்ப்பாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
22.06.2024 முதற்கட்டமாக குறித்த வர்த்தகர் காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.
அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறைத் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.