யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்துக்கு அருகில் நேற்று (03) இரவு தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களின் மூலம் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.