யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
24.05.2025 சனிக்கிழமை இக்குழந்தைகள் பிறந்ததாகவும், தற்போது விசேட பராமரிப்பு பகுதியில் வைத்துப் பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு 5 குழந்தைகளைப் பிரசவித்ததாகவும், தாயும் , குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.