முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வா முன்னிலையில் நேற்று (09) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேர்வின் சில்வா மற்றும் ஆறு சந்தேக நபர்களையும் ஜூன் 23 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்