2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று 18ம்திகதி ஆரம்பமாகியது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை எதிர்வரும் 20ம்திகதி விடுமுறை வழங்கப்பட்டு 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.