மூத்த நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் லென்லி ஜான்சனை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக ஊடக செய்திகள் பரவியுள்ளன.
பாணந்துறையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையின் இயக்குநர், 3.5 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பாக பாணந்துறை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு 29 ஆம் திகதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.