உடல் நல குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேசிய வைத்திசாலைக்கு வருகைதரும் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் வருகையை மட்டுப்படுத்துமாறு வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டு பிரதிப்பணிப்பாளர் வை்ததியர் ருக்ஷான் பெல்ல,
முன்னாள் ஜனாதிபதியை நேரில் சென்று பார்ப்பதற்காக பலர் வருவதால், அது அவரது உடல்நிலைக்கு சிலவேளைகளில் ஆபத்தை விளைவிக்கக்கூடுமெனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரின் வயது காரணமாகவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தேவையான அனைத்து விடயங்களையும் செய்யுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.