கொழும்பு
மட்டக்களப்பு ஏறாவூரில் ரயிலில் முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒக்ரோபர் 03 பகல் 12.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற ரயிலில் முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடவையில்லாத நிலையில் இடம்பெறும் விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.