மீகொட, ஓவிட்டிகம பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இன்று (12) ஓவிட்டிகம பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற முச்சக்கரவண்டியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வாடகை வீடொன்றுக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகளும் அவ் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மீகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.