சென்னை, வியாசர்பாடி மஸ்ஜித் முஹம்மதி & மத்ரஸா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு மௌலவி அல்ஹாபிழ் எ. முஹம்மது அலி (மன்பஈ) அவர்களின் தலைமையில் 13.06.2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதியாக சஹாரா பவுண்டேஷன் பணிப்பாளர் கலாநிதி பாஷால் ஜிப்ரி மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கலாநிதி பஷால் ஜிப்ரி ஆகியோர் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
- ஊடகப்பிரிவு