பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
யால பூங்காவின் பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்தார்.
கடும் மழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
எனினும் கடகமுவ நுழைவாயிலில் இருந்து சுற்றுலா பயணிகள் யால பூங்காவிற்குள் பிரவேசிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக மாணிக்க கங்கை நிரம்பி வழிவதால் 6 சுற்றுலா விடுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் மேலும் தெரிவித்தார்.