கண்டி – மாத்தளை வீதியில் உள்ள அலவத்துகொடையின் ரம்புக்கெள பிரதேசத்தில் (நவம்பர் 29, 2025) அதிகாலை 1.00 மணியளவில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அங்கும்புர – அலவத்துகொடை வீதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் கிராமத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு கிராமமே மண் சரிவுக்குள் அகப்பட்டு காணாமல் போயிருக்கிறது.
இதுவரை இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்பு .










