பொரளையில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதியை எதிர்வரும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரை ஐந்து இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொரளை பொலிஸார் முன்வைத்த சாட்சியங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.