இஸ்மதுல் றஹுமான்
சமூக சகோதரத்துவ அமைப்பு, கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்த பாலியல் அடிப்படையிலான வன்முறை தொடர்பான ஒரு நாள் செயலமர்வு கட்டான செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக சகோதரத்துவ அமைப்பின் தலைவர் வசந்த குமார தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் பிரபல மனோவியல் ஆலோசகர் தனுஷ்க்க கனேகொட வளவாலராக கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார். 20 மேற்பட்ட கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடக ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொண்டனர். பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.