பூட்டானில் இன்று அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாவதாக உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை இந் நிலநடுக்கம் பதிவான சில மணி நேரங்கள் கழித்து 2.8 ரிச்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் எவ்வித உயிரிழப்புகளோ, சேதங்களோ ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.