

புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பானது புத்தளக் கல்வி வளையத்தினுள் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று, அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாபெரும் கௌரவிப்பு விழாவை நேற்று (27/12/2025) நகர மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் சிறப்பாக நடாத்தியது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக தலால் ராபி (Economist, IMF Columnist, Former ADB Consultant and former Director at Ernst & Young) அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக
டாக்டர். என். எம். எம். ஷபீக் (Senior Lecturer), Head of the Department of Educational Psychology, at the Faculty of Education, University of Colombo) எம். எப்.எம்.ரியாஷ் (SLTES) Manager (Professional Development Center for Teachers, Puttalam) எ. எ. எம். அசாம்(SLPS) Assistant Director of Planning
(Manthai East Divisional Secretariat and Mullaitivu District Secretariat) ஆகியோரும் பல்வேறு விசேட அதிதிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டதுடன் புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் தலைவர் எம்.ஆர்.எம். ஸஜாத் அவர்களின் தலைமையில் சிறப்பாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 350க்கும் மேற்பட்ட அரசு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அதேபோல இந்த நிகழ்வில் துறை சார் நிபுணர்களைக் கொண்டு குழுக்கலந்துரையாடலும் இடம்பெற்றது. இன்றைய நிகழ்வின் panel discussion பகுதியை இலங்கை ஒளிபரப்பு கூட்டு தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் பக்ருதீன் தொகுத்து வழங்கினார் அதேபோல புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் முதலாவது நிர்வாக குழுவின் செயலாளரும் தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரும் ஆகிய ஐ. என். எப். றவ்ஹா மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பேச்சை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் பிரதித் தலைவர் எம். ஜெ. எம். ஆஷிப் அவர்களின் நன்றியுடன் நிறைவு பெற்றது. இந்த கௌரவிப்பு நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சை எழுத உள்ள மாணவர்களை தொடராக ஊக்கப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










