இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி சற்றுமுன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
இதனையொட்டி கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்து கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.