பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே இவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குக்கு பொறுப்பாக செயற்படுவதோடு, முன்னதாக நான்கு சந்தர்ப்பங்களில் இவர் பதில் பொலிஸ் மாஅதிபராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.