ஐ. ஏ. காதிர் கான்
பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறி வகைகளின் மொத்த விலைகள், இந்த நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளதாக, பேலியகொடை மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் மேலும் உயர்வடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மரக்கறி வகைகளுக்கு அதிகளவிலான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும், பேலியகொடை மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், இந்த நாட்களில் மரக்கறி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கையில், குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுவதாகவும், பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமைகள் காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.