இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுக்களில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்கள் நேற்று 4ம் திகதி நீர்கொழும்பு மாநகர சபை ஆணையாளர் நுவனி சுதசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கோடாரி சின்னத்தில் போட்டியிட்ட சஜித் மோகன், போத்தல் சின்னத்தில் போட்டியிட்ட ஒஸ்மான் தர்மசேன, திருமதி கீதானி பெர்ணான்டோ, கரத்தை சின்னத்தில் போட்டியிட்ட எமில் ரோஷான் ஆகியோர்களே சத்தியபிரமானம் செய்து கொண்டனர். அருட்தந்தை ஜோர்ஜ் பெர்ணாண்டோ சமய வழிபாட்டை நடத்தினார்.
மீண்டும் மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள சஜித் மோகன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் நான் இம்முறை தொடர்ச்சியாக நான்காவது தடவை தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இம்முறை சுயேச்சையாக போட்டியிட்டு தெளிவு செய்யப்பட்டுள்ளேன்.
தேசிய மக்கள் சக்தி நீர்கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைத்துள்ளது. புதிய நகர பிதாவின் கன்னி உரையில் அவரின் நீர்கொழும்பு நகர் தொடர்பான கொள்கைகள், செயல்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள், அபிவிருத்தி மற்றும் அவர்கள் எமது உதவியை பெற்றுக்கொள்வார்களா என அவர் தெரிவிக்கும் கருத்துக்களை கவணத்தில் எடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதா அல்லது எதிர்கட்சியின்
வகிப்பகத்தை செய்வதா என தீர்மானிப்போம் எனக் கூறினார். தான் நான்கு மேயர்களின் கீழ் எதிர்கட்சியில் இருந்து அவர்களுக்கு ஒத்துழைத்து தமிழ் சமூகத்திற்காக சேவை செய்துள்ளேன். தற்போது ஐந்தாவது மேயரின் கீழ் சேவை செய்ய சந்தர்பம் கிடைத்துள்ளது என்றார்.