இலங்கையில் முதன்முறையாக அரிய வகை நுளம்பினம் ஒன்றை உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த இனம் Culex (Lophoceraomyia) cinctellus ஆகும்.
இந்த கண்டுபிடிப்பு நுணுக்கமான உருவவியல் பகுப்பாய்வு மற்றும் மூலக்கூறு (DNA) சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இது இலங்கையின் நுளம்பு இனத்தில் இணைந்த சமீபத்திய நுளம்பு இனமாகும்.
ஆசிய பசுபிக் வெப்பமண்டல குறித்த ஆராய்ச்சிக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் துறையின் வைத்தியர் ஆர். எம். டி. பி. தாரக ரணதுங்க தலைமை தாங்கியுள்ளார்.
இது கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI), வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் ருஹுன பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு ஆசிய பசுபிக் வெப்பமண்டல மருத்துவ இதழிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
“இலங்கையில் நுளம்பு ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல்” என்று ஆய்வில் தொடர்புபட்ட பேராசிரியர் ரணதுங்க கூறியுள்ளார்.
இலங்கையில் இந்த நுளம்பின் கண்டுபிடிப்பு என்பது சூழலியல் மற்றும் நோய் பரப்புகை அதன் பங்கை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதாகும் என்று மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் Culex (Lophoceraomyia) cinctellus இனங்கள் இன்னும் நோயைப் பரப்புவதாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அதன் கண்டுபிடிப்பு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பாரவா வைரஸ் ஒட்டுண்ணிகள் மற்றும் ஆர்போ வைரஸ்கள் பரவுவதில் அதே துணை இனத்தைச் சேர்ந்த குலெக்ஸ் இனங்கள் ஈடுபட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் பாதுரா கொட பகுதியில் அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஏழு மாத காலப்பகுதியில் இந்த நுளம்பு தொடர்பான ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது