நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை, கண்டி, குருநாகல், மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பதுளை, கேகாலை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது










