நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 16 நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின்போது 32,201 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 736 நபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 271 பேரும் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திதற்காக 48 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.










