அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முடிவை அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்குமாறு கோரி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாக்கல் செய்த மனுக்களை செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் நேற்று (28) ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன் விசாரிக்கப்பட்டன. இந்த மனுக்களை செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரிக்க உத்தரவிட்டது.
கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் உட்பட ஒன்பது தரப்பினர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததை எதிர்த்து மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய தேசபந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்பு சபையில் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்படாத நிலையில், அவரை ஐ.ஜி.பி.யாக நியமிக்க அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கான முடிவு செல்லாதது என்றும் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
இதற்கிடையில், தேசபந்து தென்னக்கோன் பதில்பொலிஸ்மா அதிபரின் பதவியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் இந்த மனுவின் விசாரணை முடியும் வரை இடைக்காலத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.