இஸ்மதுல் றஹுமான்
12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளை மின்சார உபகரணங்களில் மறைத்து வைத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்த தாய்,மகள் உட்பட மூன்று இலங்கை பெண்களை சுங்க அதிகாரிகள் "றெட் செனல்" ஊடாக வெளியேறிச் செல்லும் போது கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து திங்கட் கிழமை இரவு 6.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த 6 ஈ. 1174 இலக்க இன்டிகோ விமான சேவை விமானத்தில் வந்திறங்கிய இம் மூவரும் "றெட் செனல்" ஊடாக வெளியேறிச் செல்லும் போது சுங்க அதிகாரிகள் மூவரையும் தடுத்து நிறுத்தி அவர்களது பயணப் பொதிகளை பரிசீலித்த போது அந் பொதிகளில் இருந்த குளிரூட்டி மற்றும் மின்சார உபகரணங்களில் சூசகமாக மறைத்து வைத்திருந்த குஷ் வகை போதைப் பொருளை கண்டுகொண்டனர். மொத்தமாக 12 கிலோ கிராம் குஷ் அங்கிருந்துள்ளன.
மூன்று பெண்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் இருவர் கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 46, 18 வயது தாயும் மகளும் மற்றயவர் 56 வயது வெல்லம்பிட்டி வர்த்தகப் பெண்.
சந்தேக நபர்கள் மூவரும் போதைப் பொருளை தாய்லாந்தில் விலைக்கு வாங்கி குளிரூட்டி மற்றும் மின்சார உபகரணங்கள் 7 ல் 12 கிலோ கிராம் போதைப் பொருளை பொதி செய்து அங்கிருந்து இந்தியா சென்னை நகரம் வந்து அங்கிருந்து இலங்கை வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளன.
இந்த மூன்று பெண்களும் இதற்கு முன் பல தடவைகள் இதே மாதிரி மின்சார உபகரணங்களை எடுத்து வந்துள்ளதாக விமான நிலைய சிசிரிவி கமராக்களை பரிசோதித்து போது விளங்கவந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக விசாரணைக்காக விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.