முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பதில் பொலிஸ்மா அதிபரால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கையை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வெளியிடுவதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (03) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக எரிசக்தி நிபுணர் விதுர ரலபனாவ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது

July 4, 2025
0 Comment
28 Views