தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 06 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (09) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதேசத்திலுள்ள கடை ஒன்றில் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளது.
இது தொடர்பில் கிடைக்கபெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது. குறித்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.