புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதி ஒருவர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுப்பில் அனுப்ப அமைச்சரவை தீர்மானித்ததையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது