இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாளை முதல் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக இன்று (16.03.2025) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த விண்ணப்பதாரர்களில், 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 75,968 தனியார் விண்ணப்பதாரர்களும் இருப்பதாக அவர் கூறினார்.
நாளை தொடங்கவுள்ள இந்தப் பரீட்சைக்கு, பரீட்சை மண்டபத்திற்கு முன்கூட்டியே வருமாறும், தேவையற்ற பொருட்களைத் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம், பரீட்சார்த்திகளிடம் சிறப்பு வேண்டுகோளை விடுத்தார்.
அதன்படி, இதை யாராவது மீறினால், அது பரீட்சை குற்றமாகக் கருதப்பட்டு, அதிகபட்ச ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், இதன் விளைவாக 5 ஆண்டுகள் பரீட்சைக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.