கடந்த இரண்டு வாரங்களில் இலங்கை கடற்படையினரால் உள்நாட்டு கடற்பரப்பில் நடத்தப்பட்ட சோதனையின் போது சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களுடன், 35 டிங்கி படகுகளையும், பல நாள் மீன்பிடி படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது
சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.